இலங்கைசெய்திகள்

மின் கட்டணத் திருத்தம்: முடிவில் திடீர் மாற்றம்

tamilnif 3 scaled
Share

மின் கட்டணத் திருத்தம்: முடிவில் திடீர் மாற்றம்

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிரணியினர் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்வைக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டிந்தது. மழைவீழ்ச்சி அதிகளவில் கிடைத்துள்ளதால் அடுத்த மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் கருத்துக்கள் அடிப்படையற்றவை.

மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் கடந்த 14 மாத காலமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். 12 பேர் மாத்திரமே கலந்துக் கொண்டார்கள்.

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர்களாக பதவி வகித்த கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, அஜித் பெரேரா ஆகியோர் தமது ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்கள்.

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான குழுவை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்குமாறு எதிரணியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த குழுவை நானே நியமித்தேன். அமைச்சர் என்ற ரீதியில் நான் பொறுப்புக் கூற வேண்டும் ஆகவே என்னை சிறப்புரிமை குழுவுக்கு அழையுங்கள்.

மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மின்சார சபை சட்டத்தை திருத்தம் செய்யாமல் மின்கட்டமைப்பில் எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டிந்தது. மழைவீழ்ச்சி அதிகளவில் கிடைத்துள்ளதால் அடுத்த மாதம் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிரணியினர் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....