10 8
இலங்கைசெய்திகள்

சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்

Share

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்சுள கஜநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் மூலம் வாக்காளர்கள் இது தொடர்பாக தெளிவான செய்தியை அனுப்பியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் தமது கருத்துக்களை வெளியிட்ட கஜநாயக்க, 2025 உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் 2018 முதல் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை தெளிவாக பிரதிபலிக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் செயல்முறையை தாமதப்படுத்த முயற்சிக்கும் அரசியல் கட்சிகள் அரசியல் நிலப்பரப்பில் இருந்து மங்கிப்போக ஆரம்பித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட முன்னைய அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தது,

இதன் விளைவாகவே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் மோசமான நிலையை அடைந்துள்ளது.

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சித்ததற்காக, இந்த உள்ளூராட்சி தேர்தலில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறந்த பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் கட்சியாக மாறியதற்காக தேசிய மக்கள் சக்திக்கு அரசாங்கத்திற்கு கஜநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கின் முடிவுகள் தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இழந்த நற்பெயரை மீண்டும் பெற முடிந்துள்ளது என்பதை காட்டுகின்றன என்றும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...