10 8
இலங்கைசெய்திகள்

சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்

Share

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்சுள கஜநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் மூலம் வாக்காளர்கள் இது தொடர்பாக தெளிவான செய்தியை அனுப்பியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் தமது கருத்துக்களை வெளியிட்ட கஜநாயக்க, 2025 உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் 2018 முதல் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை தெளிவாக பிரதிபலிக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் செயல்முறையை தாமதப்படுத்த முயற்சிக்கும் அரசியல் கட்சிகள் அரசியல் நிலப்பரப்பில் இருந்து மங்கிப்போக ஆரம்பித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட முன்னைய அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தது,

இதன் விளைவாகவே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் மோசமான நிலையை அடைந்துள்ளது.

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சித்ததற்காக, இந்த உள்ளூராட்சி தேர்தலில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறந்த பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் கட்சியாக மாறியதற்காக தேசிய மக்கள் சக்திக்கு அரசாங்கத்திற்கு கஜநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கின் முடிவுகள் தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இழந்த நற்பெயரை மீண்டும் பெற முடிந்துள்ளது என்பதை காட்டுகின்றன என்றும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...