3 8
இலங்கைசெய்திகள்

மாகாண ஆளுனர்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

Share

மாகாண ஆளுனர்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

மாகாண ஆளுனர்கள் சிலர், தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெறாத நிலையில், அரசாங்கத்தின் சில அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பு உள்ளுர் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்படுவது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை என்ற போதிலும் தேர்தல் முறைகேடுகளை எதிர்ப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தென், கிழக்கு மற்றும் மத்திய மாகாண ஆளுனர்கள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சில நியமனங்களை வழங்கி வருவதாகவும் ரோஹன ஹெட்டியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச மற்றும் உள்ளுராட்சி மன்ற சொத்துக்கள் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்கக் கூடாது என அவர் மேலும் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் உடன் தலையீடு செய்து தடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...