19 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு

Share

ஜனாதிபதி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்த அறிவிப்பில் வேட்பு மனு தாக்கல் செய்தல் மற்றும் தேர்தல் நடத்தப்படும் திகதிகள் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் குறித்து அறிவித்து 16 முதல் 21 நாட்களில் வேட்பு மனுக்களை கோரி, அதன் பின்னர் 4 அல்லது 6 வார காலத்திற்குள் தேர்தல் நடாத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி பெற்றுக் கொள்ளல் தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசாங்க அச்சக மா அதிபர் உள்ளிட்டவர்கள் தேர்தலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 185
உலகம்செய்திகள்

போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிர முயற்சி: தெஹ்ரான் மற்றும் ஜித்தாவிற்கு தூதுக்குழுக்கள் விரைவு!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களைத் தணித்து, நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்டும் நோக்கில்...

world 184
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைப்பு: மின்சார உற்பத்தி முடிவால் குடிநீர் விநியோகம் பாதிப்பு!

மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து வழக்கத்திற்கு மாறான முறையில் தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் எடுத்துள்ள முடிவினால்,...

world 183
செய்திகள்உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே தொடரும் ரகசிய செய்திப் பரிமாற்றம்: பாகிஸ்தான் தூதுக்குழு இன்று தெஹ்ரான் வருகை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும்...

world 182
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார் ஜனாதிபதி: மகாநாயக்க தேரர்களுடன் விசேட சந்திப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஏப்ரல் 15)...