tamilnaadi 69 scaled
இலங்கைசெய்திகள்

முட்டை விலை தொடர்பில் தீர்மானம்

Share

முட்டை விலையை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சினால் இந்த யோசனை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு குறித்து நேற்றைய தினம் அமைச்சில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது,

இதற்கமைய முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 30 ரூபா செலவாவதாகவும், நாட்டில் நாளொன்றுக்கு 5.8 மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளொன்றில் நாட்டின் முட்டை தேவை 7.5 மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் சில்லறை வியாபாரி ஆகியோரை பாதுகாக்கும் வகையில் முட்டையின் அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது,

முட்டையின் அதிகபட்ச விலை குறித்து விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் மகிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன யாபா, அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Share
தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக...