24 660e304f6d824
இலங்கைசெய்திகள்

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு அதிக கொடுப்பனவு!

Share

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு அதிக கொடுப்பனவு!

பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil premajayantha) தெரிவித்துள்ளார்.

நேற்று (03) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும்.

இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு, கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான அறிக்கை கோரப்படும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுச் செயற்பாட்டிற்கு குறைந்தது 19,000 பரீட்சார்த்திகளும், 2024 க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு குறைந்தது 25,000 பரீட்சார்த்திகளும் தேவை.” என்றார்.

இதனடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் மே மாதமளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...