24 660e304f6d824
இலங்கைசெய்திகள்

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு அதிக கொடுப்பனவு!

Share

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு அதிக கொடுப்பனவு!

பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil premajayantha) தெரிவித்துள்ளார்.

நேற்று (03) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும்.

இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு, கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான அறிக்கை கோரப்படும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுச் செயற்பாட்டிற்கு குறைந்தது 19,000 பரீட்சார்த்திகளும், 2024 க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு குறைந்தது 25,000 பரீட்சார்த்திகளும் தேவை.” என்றார்.

இதனடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் மே மாதமளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...

world 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனத் தொழிலதிபர் கைது: 3.9 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 3,915,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாகக்...