வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி

Share

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி

இணையம் மூலம் பொது பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த செயற்பாடுகளை விரிவுபடுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2001ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காலமும் உள்ள பொதுப் பரீட்சைகளின் சான்றுப்பத்திரங்களை இணையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

கல்வி பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர சான்றுப் பத்திரங்களை இணையம் மூலம்பெற்றுக்கொள்ளாலாம்.

இந்த புதிய முறைமை இன்று முதல் வெளிவிவகார அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும். உரிய சான்றுப் பத்திரங்களின் டிஜிட்டல் பிரதிகளை இதன்மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கும் போது தமது மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிடல் வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தை நாடி பெற்றுக்கொள்ள முடியும்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...