அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையின் பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே

tamilnaadi 56 scaled
Share

இலங்கையின் பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே

இலங்கையின் பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடுமையாக சாடியுள்ளார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

”நாதியற்ற நபராக இருந்தவர் வேறு யாரும் இல்லை இந்த பசில் ராசபக்ச. அவரை வரவேற்பதற்காக அனைவரும் விமான நிலையம் சென்றுள்ளனர்.

விமானங்கள் இல்லாது அங்குமிங்கும் ஓடி திரிந்த இந்த நபர் தான் அவர். தமது அரசாங்கம் தோல்வியுற்றதை அறிந்து , நாட்டை விட்டு ஓடியவர் இந்த பசில் ராஜபக்ச.

இவர்கள் வருகையால் எமது நாட்டுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டினை நாசமாக்கியவர்கள். இதை நான் கூறவில்லை இந்த நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் வேறு யாரும் இல்லை இந்த ராஜபக்ச குடும்பமே.

மேலும், பொருளாதார கொலையாளிகள் வேறு யாரும் இல்லை இந்த குடும்பமே. இவர் கடந்த காலங்களில் விளையாடிய விளையாட்டை இனியும் விளையாட முடியாது. இது பாசில் ராசபக்சவின் கடைசித் தேர்தல் ஆக இருக்கலாம்‘‘ என்றார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...