27 9
இலங்கைசெய்திகள்

ஓடி ஒழிந்த அனுர – சஜித்: கடுமையாக சாடும் ரணில்

Share

ஓடி ஒழிந்த அனுர – சஜித்: கடுமையாக சாடும் ரணில்

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கும் போது சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் அனுர குமார திஸாநாயக்க (Anura Dissanayake) ஆகியோர் எங்கே ஓடி ஒழிந்தார்கள் எனவும் அவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சவால் விடுத்துள்ளார்.

அனுராதபுரம் (Anuradhapura) சல்காடு விளையாட்டரங்கில் நேற்று (17) ஆரம்பமான “இயலும் சிறிலங்கா” பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய பிரச்சினைகளுக்கு தாம் வெற்றிகரமாக தீர்வுகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “இயலும் சிறிலங்கா” தேர்தல் பிரச்சாரமானது தேசத்தைப் பிளவுபடுத்தும் களம் அல்ல என்றும், நாட்டைப் பாதுகாப்பதற்காக அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடும் இயக்கம் என்றும் ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளா்.

இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் சஜித் பிரேமதாசவோ, அனுரவோ, ஹர்ஷ டி சில்வாவோ, சுனில் ஹந்துன்நெத்தியோ அல்ல என்று தெரிவித்த ஜனாதிபதி, தமது அரசாங்கம் போதியளவு உரங்களை வழங்கிய போது, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமான அறுவடையை வழங்கிய விவசாயிகளே என நினைவு கூர்ந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அனுர குமார திஸாநாயக்கவும் இன்று மேடைகளில் மக்களின் இன்னல்களைப் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது எனவும், உண்மையில் மக்கள் படும் துன்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால் அன்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்று, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

மேலும், சஜித்தும், அனுரவும் ஏன் இந்த சவாலை ஏற்றுக் கொள்ளாமல் நாடும் மக்களும் பிரச்சினையில் தவிக்கும் போது ஓடினார்கள் என்பதற்கு தெளிவான பதிலை வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு பதில் சொல்லத் தவறினால் அவர்களை தனது மேடைக்கு வந்து இருபுறமும் உட்காரச் சொல்வேன் எனவும் ஜனாதிபதி கூறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...