மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்
இலங்கைசெய்திகள்

மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்

Share

மீண்டும் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்

நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படாவிட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கு சம்பளம் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சமகால பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு மீதி மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்துடன் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதியை இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்க வேண்டும்.

இல்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6956109675232
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர வெடிவிபத்து: பலர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் உள்ள ஒரு பாரில் (Bar) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கிப்...

WhatsApp Image 2025 07 30 at 10.13.14 1
இலங்கைஅரசியல்செய்திகள்

குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வலியுறுத்தல்!

வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில்...

MediaFile 5
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள்: CID தீவிர விசாரணை என அரசாங்கம் தகவல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப்...

feeffef8b9eb82ce9b06f1c9550878a1460042ec
செய்திகள்அரசியல்இலங்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை: வாகன இறக்குமதியை நிறுத்த முடியாது!

இலங்கையில் வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது தராதரம் பாராது...