ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் பொருளாதார மாநாடு! – பிரதமர் ஏற்பாடு

Share

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளித்து, அரசியல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்துவருகின்றார்.

இதன்படி உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை பெறும் நோக்கில் ‘பொருளாதார மாநாடு’ ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரியவருகின்றது.

இலங்கையில் பொருளாதார மறுசீரமைப்பு இடம்பெற்றால், உதவிகளை வழங்குவதற்கும், முதலீடுகளை செய்வதற்கும் தயார் என வெளிநாட்டு நிறுவனங்கள்கூட அறிவித்துள்ளன. எனவே, இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தின் பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்களும் முன்வைக்கப்படவுள்ளன.

அதேபோல நன்கொடையாளர் மாநாடு, சுற்றுலாத்துறை மாநாடு உள்ளிட்ட ஏற்பாடுகளும் இடம்பெறவுள்ளன என்று தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...