1 22
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் நெருக்கமானவர்களுக்கு காத்திருந்த சிக்கல்!

Share

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கையை செயற்படுத்தினால் தனக்கு இணக்கமானவர்கள் நெருக்கடிக்குள்ளாகுவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. குண்டுத்தாக்குதலின் உண்மை தன்மை வெளிப்படுத்தப்படவில்லை.

ஆட்சிக்கு வந்து 3 மாத காலத்தில் உண்மை சூத்திரதாரியை பகிரங்கப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதியளித்தார். ஆனால் அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குண்டுத்தாக்குதல்கள் பற்றி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளார். தனது ஆட்சியில் உண்மையை பகிரங்கப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்குமா என்பதை எதிர்பார்த்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆகிய அறிக்கை சமர்ப்பித்துள்ளன.

இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் செயற்படுத்தவில்லை.

அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்தினால் தனக்கு இணக்கமானவர்கள் நெருக்கடிக்குள்ளாகுவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்தினாரே தவிர இவ்விடயத்தில் கரிசணை கொள்ளவில்லை. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்த பிரச்சினைகள் ஏதும் கிடையாது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும்நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை தாராளமாக நடைமுறைப்படுத்தலாம். இருப்பினும் அரசாங்கம் அது குறித்து கவனம் கொள்ளவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்தில் கடந்த கால விசாரணைகளின் விபரங்களே குறிப்பிடப்படுகின்றன. புதிதாக எந்த தகவல்களும் குறிப்பிடப்படுவதில்லை.

கோட்டாபய ராஜபக்சவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குண்டுத்தாக்குதல் விவகாரத்தை தனது வெற்றிக்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...