tamilni 343 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் பரபரப்பு தகவல்

Share

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் பரபரப்பு தகவல்

இலங்கையில் நடைபெற்ற 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரிட்டிஷ் தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4இன் ஆவணப்பட தயாரிப்பாளர்கள், தமது தயாரிப்பில் நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு, அரச அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த, ‘விசில்ப்ளோயர்’ என்ற தகவலளாலரான அசாத் மௌலானாவின் கூற்றுகளை ஆதரிக்க நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஆவணப்படத்தின் இயக்குனர் தோம் வோக்கர் மற்றும் தயாரிப்பாளர் பென் டி பியர் ஆகியோர், ஜெனீவாவில் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சனல் 4 ஆவணப்படத்தின் படி, வெளிநாட்டில் தஞ்சம் கோரிய அசாத் மௌலானா, 2018இல் புத்தளத்தில் தற்கொலை குண்டுதாரிகளுக்கும், இலங்கையின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சந்திப்பை நேரில் பார்த்துள்ளார்.

இருப்பினும், சஹ்ரான் ஹாசிம் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்கான எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என்று, ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான பேஸ்மென்ட் பிலிம்ஸின் நிறுவனர் தோம் வோக்கர், கூறியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...