tamilnid 2 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அதிருப்தி

Share

இலங்கை அரசாங்கம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற சில மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவயைின் 55 ஆம் அமர்வுகளில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட தாக்குதல்கள் குறித்த மெய்யான தகவல்களை வெளிப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்படும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களுக்காக நீதி வேண்டி குரல் கொடுக்கும் தரப்புக்கள் சிறையில் அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கர்தினால், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...