tamilni 371 scaled
இலங்கைசெய்திகள்

சிறையில் அடைக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கும் பொன்சேகா

Share

சிறையில் அடைக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கும் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும், கடமைகளை தவறவிட்டவர்களையும் நிச்சயம் சிறைக்கு அனுப்புவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய பாதுகாப்புடன் பொருளாதாரம், சுகாதாரம், உணவு பாதுகாப்பு தொடர்புப்பட்டதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டின் ஒருமைப்பாடு, ஆட்புல எல்லை, பொருளாதாரம், வெளிநாட்டு உறவு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்புப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டன. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமது குறுகிய தேவைகளுக்காக தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தின. இதன் பெறுபேறும் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது.

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறையில் முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு 423 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை காட்டிலும் இம்முறை 12 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவத்துக்கு 218 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வாழ்க்கை செலவுகள் உயர்வடைந்துள்ள பின்னணியில் இம்முறை பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது அவசியமற்றது என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார பாதிப்பு என்பதற்காக வீட்டுக்கு ஜன்னல் மற்றும் கதவுகளை பொருத்தாமல் இருக்க முடியாது.

தேசிய பாதுகாப்புக்கு வருடாந்தம் இந்தியா 81 பில்லியன் டொலர், பாக்கிஸ்தான் 10.3 பில்லியன் டொலர், பங்களாதேஸ் 5.பில்லியன் டொலi, நேபாளம்0.4 பில்லியன், இலங்கை 1.1 பில்லியன் டொலர், மலேசியா 3.4 பில்லியன் டொலர், இந்தோனேசியா 9.1 பில்லியன் டொலர், சீனா 292 பில்லியன் டொலர், தாய்லாந்து 5.7 பில்லியன் டொலர், தென்கொரியா 46.பில்லியன் டொலர், ஜப்பான் 46 பில்லியன் டொலர் ஒதுக்குகின்றன.

இலங்கையும், நேபாளும் மாத்திரமே 1 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் நிதி ஒதுக்குகின்றன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நேபாளத்தை காட்டிலும் குறைவான அளவு நிதியை தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்க முடியாது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தினரது எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது. இறுதி கட்ட யுத்தத்தின் போது 2 இலட்சமாக காணப்பட்ட இராணுவத்தினரது எண்ணிக்கை தற்போது 153000 ஆக காணப்படுகிறது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இராணுவத்தினரது எண்ணிக்கையை 1 இலட்சமாக குறைப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இது ஒருபோதும் சாத்தியமடையாது.

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் இராணுவத்துக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் பயன்படுத்த முடியாத யுத்த தாங்கிகளே இராணுவத்திடம் உள்ளன. விமானப்படையிடம் ஒரு ஜெட் விமானம் மாத்திரமே உள்ளது.

ஆகவே இம்முறை புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து பேசப்படுகிறது. தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தினருக்கும்,ஏனைய மக்களுக்கும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை.

குண்டுத்தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும், கடமைகளை தவறவிட்டவர்களையும் நிச்சயம் சிறைக்கு அனுப்புவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...