22 5
இலங்கைசெய்திகள்

டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்

Share

டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்

டுபாயில் பாரியளவிலான ஹெரோயின் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் தனது கர்ப்பிணி மனைவியை பயன்படுத்தி இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் படோவிட்ட 3 ஆம் கட்டத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

டுபாய்க்கு தப்பிச்சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளரான சந்தேகநபர், ஹெரோயின் போதைப்பொருளை மொத்தமாக கொள்வனவு செய்து வீட்டில் பொதி செய்து ரத்மலானை, தெஹிவளை, மொரட்டுவ, கொரளவெல்ல, பொரலஸ்கமுவ, பாணந்துறை ஆகிய இடங்களில் விந்பனை செய்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிலியந்தலை ஆகிய பகுதிகளில் சில்லறை விலையில் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு விசேட அதிரடிப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் முதித தல்படடு அவர்களின் மேற்பார்வையில் பொலிஸ் சார்ஜன்ட் (56958) பிரசன்ன, (40753) ஹெட்டியாராச்சி, பொலிஸ் கான்ஸ்டபிள்களான (86453) ஜயதிலக்க, (85009) வீரவன்ச ஆகியோரினால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...