22 5
இலங்கைசெய்திகள்

டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்

Share

டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்

டுபாயில் பாரியளவிலான ஹெரோயின் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் தனது கர்ப்பிணி மனைவியை பயன்படுத்தி இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் படோவிட்ட 3 ஆம் கட்டத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

டுபாய்க்கு தப்பிச்சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளரான சந்தேகநபர், ஹெரோயின் போதைப்பொருளை மொத்தமாக கொள்வனவு செய்து வீட்டில் பொதி செய்து ரத்மலானை, தெஹிவளை, மொரட்டுவ, கொரளவெல்ல, பொரலஸ்கமுவ, பாணந்துறை ஆகிய இடங்களில் விந்பனை செய்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிலியந்தலை ஆகிய பகுதிகளில் சில்லறை விலையில் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு விசேட அதிரடிப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் முதித தல்படடு அவர்களின் மேற்பார்வையில் பொலிஸ் சார்ஜன்ட் (56958) பிரசன்ன, (40753) ஹெட்டியாராச்சி, பொலிஸ் கான்ஸ்டபிள்களான (86453) ஜயதிலக்க, (85009) வீரவன்ச ஆகியோரினால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...