22 5
இலங்கைசெய்திகள்

டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்

Share

டுபாயிலிருந்து வரும் உத்தரவு : கர்ப்பிணி பெண்ணின் உதவியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்

டுபாயில் பாரியளவிலான ஹெரோயின் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் தனது கர்ப்பிணி மனைவியை பயன்படுத்தி இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் படோவிட்ட 3 ஆம் கட்டத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

டுபாய்க்கு தப்பிச்சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவின் பிரதான உதவியாளரான சந்தேகநபர், ஹெரோயின் போதைப்பொருளை மொத்தமாக கொள்வனவு செய்து வீட்டில் பொதி செய்து ரத்மலானை, தெஹிவளை, மொரட்டுவ, கொரளவெல்ல, பொரலஸ்கமுவ, பாணந்துறை ஆகிய இடங்களில் விந்பனை செய்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிலியந்தலை ஆகிய பகுதிகளில் சில்லறை விலையில் விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு விசேட அதிரடிப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் முதித தல்படடு அவர்களின் மேற்பார்வையில் பொலிஸ் சார்ஜன்ட் (56958) பிரசன்ன, (40753) ஹெட்டியாராச்சி, பொலிஸ் கான்ஸ்டபிள்களான (86453) ஜயதிலக்க, (85009) வீரவன்ச ஆகியோரினால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...