போதைப்பொருள் கடத்தல்! – 45,000 பேர் கைது

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,441 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 45,801 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,11,881 கிலோ கஞ்சாவுடன் 34,062 சந்தேக நபர்களும் மற்றும்109 கிலோ ICE போதைப்பொருளுடன் 10,532 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLanka

Exit mobile version