7d6e44195d787a4c655632ff32ad29e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை சந்தேகநபர்களுக்கு கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்பு!!

Share

அக்கரைப்பற்றில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரிடம் ​மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிழக்கு மாகாணத்தில் பல இடற்கயில் தங்காபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் கொள்ளையடித்த தங்காபரணங்களை விற்றுள்ளதுடன், அடகு வைத்து 37 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் 37 பவுண் பெறுமதியான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் தங்காபரணங்களை அடகுவைத்துள்ள நிறுவனங்கள் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்காக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

03 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இறக்காமத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதியின் பின்னர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...