24 667944cf387a7
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வியாபாரி

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வியாபாரி

இலங்கையின் கடற்பரப்பில் சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் பயணித்தபோது கைப்பற்றப்பட்ட படகின் சொந்தக்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கட்டுநாயக்க(Katunayake) விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் இருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்தபோதே அவர் இன்று(26.06.2024) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் 200 கிலோகிராம் போதைப்பொருளை ஏற்றிய உள்ளூர் பல நாள் கடற்றொழில் இழுவை படகு கைப்பற்றப்பட்டதுடன் 06 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை நேற்று (25) தெரிவித்திருந்தது.

இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் தொலைவில் இலங்கையின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த படகு இடைமறிப்பு செய்யப்பட்டதாகவும் கடற்படை அறிவித்திருந்தது.

இதனையடுத்து போதைப்பொருட்கள் ஏற்றப்பட்ட படகுடன் கைது செய்யப்பட்ட 6 பேர், இலங்கையின் கரையை நோக்கி அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்திருந்தது.

இந்தநிலையிலேயே கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருள் ஏற்றப்பட்ட படகின் உரிமையாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...