kkk
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

டெங்கு நுளம்புகளை கண்டறிய ட்ரோன் கமராக்கள்!

Share

டெங்கு நுளம்புகளை கண்டறிய ட்ரோன் கமராக்கள்!

பொது சுகாதார ஆய்வாளர்களால் (PHI) அணுக முடியாத உயரமான கட்டிடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஆய்வு செய்து கண்டறிய ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய கட்டிடங்களில் தேங்கி நிற்கும் நீரில் இரசாயனங்களும் தெளிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மேல்மாகாண பூச்சியியல் நிபுணர் ஆயிஷா சரத்சந்திர,

நீரை அகற்ற முடியாத இடங்களில் இந்த பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த இரசாயனங்களைப் பயன்படுத்திய பிறகு, நுளம்பு குடம்பிகள் கூட அழிக்கப்படுவதோடு குறித்த இடங்களில், நுளம்புகள் திரும்பி வந்து முட்டையிடாது, எனவும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவி வரும் அதிக அபாய டெங்கு நிலைமை குறையும் வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சுகாதார அமைச்சின் அலுவலகங்களுக்கும் தினசரி அடிப்படையில் ட்ரோன் கமராக்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 35,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1749716262 image 42525c8345
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதி!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை...

ranil wickremesinghe 1540622362 tile 1652346881 1652542509 1658301653
செய்திகள்இலங்கை

இந்தியா பயணத்தின்போது: ரணில் விக்கிரமசிங்க தம்பதியினர் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாடு!

இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர்...

250925 AKD UNGA
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாத வலைக்குள் நாடு சிக்காது’: இலங்கை தினக் கொண்டாட்டம் மூலம் நல்லிணக்கம் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்படும்...

archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான்...