kkk
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

டெங்கு நுளம்புகளை கண்டறிய ட்ரோன் கமராக்கள்!

Share

டெங்கு நுளம்புகளை கண்டறிய ட்ரோன் கமராக்கள்!

பொது சுகாதார ஆய்வாளர்களால் (PHI) அணுக முடியாத உயரமான கட்டிடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஆய்வு செய்து கண்டறிய ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய கட்டிடங்களில் தேங்கி நிற்கும் நீரில் இரசாயனங்களும் தெளிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மேல்மாகாண பூச்சியியல் நிபுணர் ஆயிஷா சரத்சந்திர,

நீரை அகற்ற முடியாத இடங்களில் இந்த பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த இரசாயனங்களைப் பயன்படுத்திய பிறகு, நுளம்பு குடம்பிகள் கூட அழிக்கப்படுவதோடு குறித்த இடங்களில், நுளம்புகள் திரும்பி வந்து முட்டையிடாது, எனவும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவி வரும் அதிக அபாய டெங்கு நிலைமை குறையும் வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சுகாதார அமைச்சின் அலுவலகங்களுக்கும் தினசரி அடிப்படையில் ட்ரோன் கமராக்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 35,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...