இலங்கைசெய்திகள்

இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

Share
tamilni 409 scaled
Share

இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

ட்ரோன் தாக்குதல் மூலம் இந்தியப் பெருங்கடலில் இன்று (23.12.2023) வணிகக் கப்பலொன்று சேதமடைந்துள்ளது.

குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே கூறியுள்ளது.

மேலும் இந்த கப்பல் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இரண்டு கடல்சார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பலில் சில கட்டமைப்பு சேதங்கள் பதிவாகியுள்ளதோடு முன்னதாக இந்த கப்பல் சவூதி அரேபியாவுக்கு சென்ற நிலையில் இந்திய துறைமுகத்திற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...