24 6688d9d113c34
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி 

Share

வெளிநாட்டவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிபத்திரங்களை பெறுவதற்கு இதுவரை வெரஹெர வரை செல்ல வேண்டியிருந்தது.

இது தொடர்பாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினரும், சுற்றுலாப் பயணிகளும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை இந்த நடைமுறை மூலம் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

எப்படியிருப்பினும், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் நாடுகளில் வழங்கிய ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...