24 6615f9368b543
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தெய்வமாக மாறிய சாரதி : உயிர் தப்பிய 50 பயணிகள்

Share

இலங்கையில் தெய்வமாக மாறிய சாரதி : உயிர் தப்பிய 50 பயணிகள்

நாவலப்பிட்டி பேருந்து சாரதி நொடிப்பொழுதில் எடுத்த முடிவால் 50 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலொஸ்பாகேயிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மலையில் மோதி நேற்று விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள், பயணிகள் ஐவர் மற்றும் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி தொலொஸ்பாகே பிரதான வீதியில் நாவலப்பிட்டி உடுவெல்ல பிரதேசத்தில் நேற்று காலை 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, ​​பேருந்தின் முன்பக்கத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாகவும் அதேநேரம் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனினும் சாரதி தனது உயிரை பணயம் வைத்து பேருந்தை மலையின் மீது மோதச் செய்து நிறுத்துவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அதற்கமையவே மலையில் மோதி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து விபத்துக்குள்ளான வீதியின் மறுபுறம் சுமார் 300 மீற்றர் உயரமான மதில் சுவருடன் கூடிய பள்ளம் காணப்படுவதாகவும், பேருந்தின் சாரதி பேருந்தை பள்ளத்தில் விழ விடாமல் தடுத்து பெரும் விபத்தை தடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து விபத்துக்குள்ளான போது, ​​குறித்த பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் ஐம்பது பேர் பயணித்துள்ளனர்.

சாரதி தனக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் மலையில் மோதி பேருந்தை நிறுத்தியிருக்கவில்லை என்றால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...