இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

24 663ace0d7ee11

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஆண்டு தோறும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினால் அதிகரித்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் 30657 ஆக காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 72546 ஆக உயர்வடைந்துள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரண இந்த புதிய தகவல்களை வழங்கியுள்ளார்.

Exit mobile version