16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

Share

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள். ஆனால் தடை நீக்கப்பட்டது ஏனென்றால் அவர்கள் பெரும்பான்மை என்பதால்தான் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் தொடர்ந்து கூறியதாவது, 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, கொல்லப்பட்டு அனைவரும் வடக்குக்கு விரட்டப்படும் போது எங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் எடுத்தோம்.

ஆயுதம் ஏந்தி போராடிய ஜே.வி.பி பயங்கரவாதிகள் அல்ல நாங்கள் மட்டும் பயங்கரவாதிகளா? ஒரே நாட்டில் ஏன் வேறுபாடுகள்?இங்கே தான் தமிழ் – சிங்கள பிரச்சினை தோன்றுகிறது. சம்பவங்களை நாம் பார்க்கும் நோக்கில் தான் பயங்கரவாத கோணங்கள் தோன்றுகிறது.

செம்மணி மனித புதைகுழியில் கைக்குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படியானால் கைக்குழந்தைகள் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தார்களா? தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததெல்லாம் சரி என்று நான் சொல்லமாட்டேன்.

யுத்தம் நடைபெறும் போது இரு பக்கமும் தவறுகள் ஏற்படலாம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்தாலும், மக்களின் மனதில் இருப்பதை தடுக்க முடியாது.

நான் உண்மை உரைப்பதால் மக்கள் என்னை விரும்புகின்றனர்.எனக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசித் தலைவரை கடவுளாக வணங்கவும் முடியும் அதேபோல் மற்றையவரின் கடவுளை மதிக்கவும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...