tamilni 117 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயன்பாட்டிற்கு வரும் Door To Door விநியோக முறை

Share

இலங்கையில் பயன்பாட்டிற்கு வரும் Door To Door விநியோக முறை

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இலங்கையில் உள்ள வீடுகளுக்கு பொருட்களை அனுப்ப பயன்படுத்தும் Door to Door விநியோக முறையை சுங்கத்துறை இடைநிறுத்திய நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த Door to door விநியோக முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் வெளியீடு இடைநிறுத்தப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பாதுகாப்பு, உரிமையாளர்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் மற்றும் சட்டவிரோத பொருட்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்படுவதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை இடைநிறுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் நாட்டிலுள்ள அவர்களது உறவினர்களுக்கும் சிறந்த சேவையை வழங்கும் இந்த சேவையை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...