tamilni 117 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயன்பாட்டிற்கு வரும் Door To Door விநியோக முறை

Share

இலங்கையில் பயன்பாட்டிற்கு வரும் Door To Door விநியோக முறை

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இலங்கையில் உள்ள வீடுகளுக்கு பொருட்களை அனுப்ப பயன்படுத்தும் Door to Door விநியோக முறையை சுங்கத்துறை இடைநிறுத்திய நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த Door to door விநியோக முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் வெளியீடு இடைநிறுத்தப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பாதுகாப்பு, உரிமையாளர்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் மற்றும் சட்டவிரோத பொருட்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்படுவதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை இடைநிறுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் நாட்டிலுள்ள அவர்களது உறவினர்களுக்கும் சிறந்த சேவையை வழங்கும் இந்த சேவையை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...