4 1
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

Share

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

ஆடம்பர வாகனங்களை ஓட்டுவதற்கும், கதவுகளைத் திறப்பதற்கும் வேலையாட்கள் இருக்க வேண்டும் என்ற பிரத்தியேக ஆசை எதுவும் இல்லை என குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்(saroja pauiraj) தெரிவித்துள்ளார்.

தனது வேலையை இன்னும் திறம்படச் செய்ய வாகனம் மட்டுமே தேவை என்கிறார்.

யாருக்கும் வாகன உரிமம் வழங்கப்படாது

புதிய அரசாங்கத்தின் கீழ், யாருக்கும் வாகன உரிமம் வழங்கப்படாது என்றும், உரிய கடமைகளுக்கு மட்டுமே வாகனம் வழங்கப்படும் என்றும், ஐந்து வருட முடிவில் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத் தின் மீது அதிருப்தி அடையச் செய்யும் அரசியல் தந்திரமாக அரிசி, தேங்காய் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், அவர்கள் மீது மக்கள் வீழ்ந்து விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், பொதுத் தேர்தலுக்குப் பிறகு தீவிரமாக வேலை செய்வதற்கான வாய்ப்பு மழை மற்றும் வெள்ளத்தால் தடைப்பட்டது வருத்தமளிக்கிறது, என்று அவர் தொடர்ந்து கூறினார்.

மேலும் அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்யும் அரசியல் தந்திரமாக தேங்காய் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன, அதற்காக மக்கள் அதில் விழந்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...