9 12
இலங்கைசெய்திகள்

அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பு! ட்ரம்பின் அடுத்த நகர்வு

Share

அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பு! ட்ரம்பின் அடுத்த நகர்வு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) அடுத்த வாரம் சர்வதேச நாடுகளுக்கு இடையில் பரஸ்பர வரியை அறிவிப்பேன் என அறிவித்துள்ளார்.

அமெரிக்க(USA) ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே ட்ரம்ப் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

மேலும், அண்டைய நாடுகளுக்கு இறக்குமதி வரிவிதிப்புகளையும் வெளியிட்டு வருகின்றார்.

அதற்கு கனடா, சீனா போன்ற நாடுகள் தங்களது கண்டனங்களையும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்கா வர்த்தகப் போரின் விரிவாக்கமாக, அடுத்த வாரம் பரஸ்பர வரி விதிக்க திட்டமிட்டுள்ளேன்.

இதனால் மற்ற நாடுகளுடன் நாம் சமமாக நடத்தப்படுவோம். நாங்கள் அதிகமாக வரி வசூல் செய்ய விரும்பவில்லை.

இது நியாயமான வழி தான் என்று நான் நினைக்கிறேன் அத்துடன் இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூல் செய்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூல் செய்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் கனடா, மெக்சிகோ நாட்டு பொருட்களுக்கு புதிதாக 25 சதவீதம் இறக்குமதி வரியை டிரம்ப் விதித்திருந்த நிலையில், இறுதியில், அவர் புதிய இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தம் செய்து உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...