9 16
இலங்கைசெய்திகள்

வரலாற்று சாதனை ஒன்றை படைத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

Share

வரலாற்று சாதனை ஒன்றை படைத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விளையாட்டு போட்டி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் IPL டி20 கிரிக்கெட் தொடர் போல், அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டுத் தொடர் NFL ரக்பி ஆகும்.

இப்போட்டியை நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் என பில்லியன் கணக்கான மக்கள் கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்தத் தொடரின் இறுதிப்போட்டி சூப்பர் பவுல் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் பொதுவிடுமுறை கூட அளிக்கப்படும்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சூப்பர் போட்டியைக் காண ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மைதானத்திற்கு வந்தார்.

அதேபோல் லியோனல் மெஸ்ஸி, டாம் பிராட்டி, எலான் மஸ்க், பிராட்லி கூப்பர் உள்ளிட்ட பிரபலங்களும் வந்திருந்தனர்.

மேலும் மைதானத்தில் மொத்தம் 74,000 பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். இப்போட்டியில் Philadelphia Eagles அணி 40-22 என்ற கணக்கில் Kansas City அணியை வீழ்த்தியது.

சூப்பர் பவுல் நிகழ்ச்சியில் எந்த ஜனாதிபதியும் இதுவரை கலந்துகொண்டதில்லை. ஆனால் ட்ரம்ப் பங்கேற்றதன் மூலம் முதல் அமெரிக்க ஜனாதிபதி எனும் வரலாற்று சாதனையை படைத்தார்.

முன்னதாக, 1980களில் NFL அணியை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...