டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!
இலங்கைசெய்திகள்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

Share

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

ஜூலை 28ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

எனினும், இது கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது குறைவான பெறுமதியாகவே உள்ளது.

கடந்த வாரத்தில் ஜப்பானிய யெனுக்கு எதிராக ரூபா 15.9 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்டிற்கு எதிராக 3.8 சதவீதமும் அதிகமதிப்பு கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் பொருளாதாரத்தின் நடத்தை குறித்த மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, இந்திய ரூபாய்க்கு எதிராக ரூபாய் 9.4 சதவீதமும், யூரோ நாணய அலகுக்கு எதிராக 7 சதவீதமும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ரூபாவின் நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் கூறுகையில், இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்.

வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலரின் பெறுமதியை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சமீபகாலமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முற்றிலும் டொலர் பரிவர்த்தனையே காரணம்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....