டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!
இலங்கைசெய்திகள்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

Share

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

ஜூலை 28ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

எனினும், இது கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது குறைவான பெறுமதியாகவே உள்ளது.

கடந்த வாரத்தில் ஜப்பானிய யெனுக்கு எதிராக ரூபா 15.9 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்டிற்கு எதிராக 3.8 சதவீதமும் அதிகமதிப்பு கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் பொருளாதாரத்தின் நடத்தை குறித்த மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, இந்திய ரூபாய்க்கு எதிராக ரூபாய் 9.4 சதவீதமும், யூரோ நாணய அலகுக்கு எதிராக 7 சதவீதமும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ரூபாவின் நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் கூறுகையில், இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்.

வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலரின் பெறுமதியை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சமீபகாலமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முற்றிலும் டொலர் பரிவர்த்தனையே காரணம்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...