அந்நிய செலாவணி கையிருப்பில் மாற்றம்

24 663437403bc14

அந்நிய செலாவணி கையிருப்பில் மாற்றம்

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ஐந்து பில்லியன் டொலர் வரையில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் இவ்வாறு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் குறிப்பிடத்தக்களவு நாணயங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்த மொத்த கையிருப்பு தொகையில் சீன மத்திய வங்கியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட செலாவணி பரிமாற்று கடன் தொகை 1.5 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version