tamilni 381 scaled
இலங்கைசெய்திகள்

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் தகவல்

Share

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் தகவல்

இலங்கையில் மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் வைத்தியர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி உயர்கல்வி மற்றும் வேறும் காரணங்களுக்காக இலங்கை மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கற்கை நெறிகளுக்காக அல்லது வேறு தேவைகளுக்காக செல்லும் மருத்துவர்கள் நாடு திரும்பாதிருக்கும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு மருத்துவ பயிற்சிகளுக்காக சென்ற மருத்துவர்கள் பயிற்சி முடித்துக் கொண்டு நாடு திரும்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு மருத்துவர்கள் செல்வதனை மேலும் குறைத்துக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினாலும் வரி அறவீட்டு கொள்கைகளினாலும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் நாட்டை வெளியேறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...