MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

Share

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (17) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்திற்குள் சில வெறுமையான தோட்டாக்கள் (Empty Shells) கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் வைத்தியர்கள், தமக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியர்களின் இந்தத் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக, அநுராதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தூர இடங்களிலிருந்து சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வெளிநோயாளிப் பிரிவு மற்றும் ஏனைய கிளினிக் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், வைத்தியசாலை அதிகாரிகளுடன் பாதுகாப்புத் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...