10 19
இலங்கைசெய்திகள்

தேர்தல் சட்டங்கள் தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு

Share

தேர்தல் சட்டங்கள் தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

இவ்வருட ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் நடைமுறைபடுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் அனைத்து தேர்தல் சட்டங்களும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்‌.எம்‌.ஏ.எல்‌.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்செயல்களை தடுக்க பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 6933e6366e508
உலகம்செய்திகள்

கனடாவில் கார் விபத்து: யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர்...

25 69342677b4982
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 10 இலட்சம் அபராதம்!

பலாங்கொடை – பெலிஹுல்ஓயா பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை விற்பனை...

images 3 1
இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தவணை 6 மாதங்கள் இடைநிறுத்தம் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை...

images 4 1
இலங்கைசெய்திகள்

டித்வா புயல் பேரழிவு: சி.டி ஸ்கேன் உட்பட 3 பெரிய மருத்துவமனைகள் சேதம் – 100 சிறிய மருத்துவமனைகள் பாதிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் நாட்டின் மூன்று பெரிய மருத்துவமனைகளும், சுமார் 100...