BANDU
இலங்கைசெய்திகள்

நாளை முதல் சிறப்பு நிவாரணப் பொதி விநியோகம் ஆரம்பம்!

Share

சதொச நிறுவனத்தினால் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி சார்ந்த தகவல்களை இன்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டார்.

ரூபாய் 2,751 மற்றும் 2,489 க்கு சந்தையில் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை சதொசவில் 1998 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். குறித்த பொதிகளை பதிவு செய்வதன் மூலம் வீடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இப்பொதியை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு 1998 என்ற இலக்கத்தினை அழைப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோன்று 0115 201 998 என்ற வட்ஸ்அப் எண்ணின் மூலமும் பதிவினை மேற்கொள்ள இயலும்.

இவ் பொதிகள் விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதியில் 10 கிலோ சம்பா அரிசி, 2 கிலோ பழுப்பு சீனி, 1 பக்கெட் நூடுல்ஸ், 100 கிராம் தேயிலை பக்கெட், 250 கிராம் நெத்தலி, 2 சவர்க்காரக் கட்டிகள் மற்றும் 1 பக்கெட் பப்படம் ஆகியவை நிவாரண பொதியில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...