15 8
இலங்கைசெய்திகள்

தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் பொதுச் சொத்துக்கள் குறித்து வெளியிடப்பட்ட அதிருப்தி

Share

தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் பொதுச் சொத்துக்கள் குறித்து வெளியிடப்பட்ட அதிருப்தி

ஜனாதிபதி தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பொது வளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 4 வரை இது தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இந்த மீறல்களைத் தடுத்து நிறுத்தி தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தேர்தல் ஆணையகத்தை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை விமானப்படை உட்பட அரசாங்க வாகனங்கள் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்வது மற்றும் பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது போன்ற அரசாங்கத்தின் முடிவுகள் கவலையளிக்கின்றன.

இந்த விடயங்கள் மக்களுக்கு வழங்கும் பலன்களை தாம் ஆதரிக்கும் அதே வேளையில், தேர்தல் காலத்தில் சில வேட்பாளர்களுக்குச் சாதகமாக அவற்றை அறிவிப்பது, நம்பி கொடுக்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் தேர்தல் பிரசாரங்களுக்காக பொது வளங்களை தவறாகப் பயன்படுத்தினால், www.apesalli.lk என்ற முகவரிக்கு அல்லது 0763223442 என்ற அவசர இலக்கங்களுக்கு முறையிடுமாறு அனைத்து குடிமக்களுக்கும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா அழைப்பு விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...