15 8
இலங்கைசெய்திகள்

தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் பொதுச் சொத்துக்கள் குறித்து வெளியிடப்பட்ட அதிருப்தி

Share

தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் பொதுச் சொத்துக்கள் குறித்து வெளியிடப்பட்ட அதிருப்தி

ஜனாதிபதி தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பொது வளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 4 வரை இது தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இந்த மீறல்களைத் தடுத்து நிறுத்தி தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தேர்தல் ஆணையகத்தை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை விமானப்படை உட்பட அரசாங்க வாகனங்கள் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்வது மற்றும் பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது போன்ற அரசாங்கத்தின் முடிவுகள் கவலையளிக்கின்றன.

இந்த விடயங்கள் மக்களுக்கு வழங்கும் பலன்களை தாம் ஆதரிக்கும் அதே வேளையில், தேர்தல் காலத்தில் சில வேட்பாளர்களுக்குச் சாதகமாக அவற்றை அறிவிப்பது, நம்பி கொடுக்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் தேர்தல் பிரசாரங்களுக்காக பொது வளங்களை தவறாகப் பயன்படுத்தினால், www.apesalli.lk என்ற முகவரிக்கு அல்லது 0763223442 என்ற அவசர இலக்கங்களுக்கு முறையிடுமாறு அனைத்து குடிமக்களுக்கும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா அழைப்பு விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
Pharmacy 1200px 24 12 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டவிரோத மருந்தகங்களுக்கு எதிராக அதிரடி: 9.5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம்!

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ,...

IMG 20260117 WA0023
செய்திகள்இலங்கை

இலங்கையில் உலகின் மிகப்பெரிய அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் அறிமுகம்!

உலகிலேயே இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் மிகப்பெரியதும், அதிக பெறுமதி வாய்ந்ததுமான அரிய...

New Project 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

53 நாட்களுக்குப் பிறகு மீண்டது ரயில் பாதை: நாளை முதல் கொழும்பு – பலாவி இடையே ரயில் சேவை ஆரம்பம்!

டித்வா (Ditwah) புயல் காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு முதல் பலாவி வரையான ரயில் போக்குவரத்து,...

IMG 7681
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொத்மலையில் மாபெரும் சிரமதானப் பணி: 20 கிராமங்களுக்கான போக்குவரத்துப் பாதையைச் சீரமைக்க 2,000 பேர் திரண்டனர்!

டித்வா (Ditwah) புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய்...