2 5
இலங்கைசெய்திகள்

சிறுநீரக நோயாளிகளுக்கான முக்கிய சோதனை: அரச மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்

Share

கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு அவசியமான டக்ரோலிமஸ் அளவு சோதனைகள், மற்றும் சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் குறித்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் காலவரையின்றி தாமதமாகி வருவதாக அரச மருத்துவமனை ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஆய்வக அதிகாரிகளின் கூற்றுப்படி, இரசாயன பற்றாக்குறை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இந்த சோதனை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில், குறித்த இரசாயனங்கள் இல்லாததால் தனது அமைப்பும் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சுரங்கா தொலமுல்ல குறிப்பிட்டுள்ளார்.

டக்ரோலிமஸ் அளவு சோதனை என்பது ஒரு முக்கியமான சோதனையாகும், இது ஒரு மருத்துவர் பரிந்துரைத்தபடி, மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளுக்கு மாதந்தோறும் அல்லது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் செய்யப்பட வேண்டும் .

சோதனை முடிவுகளின் அடிப்படையில்: டக்ரோலிமஸ் அளவுகள் நிலையான வரம்பிற்குக் கீழே இருந்தால், அதன் அளவை அதிகரிக்க வேண்டும்.

அளவுகள் மிக அதிகமாக இருந்தால், கடுமையான பக்க விளைவுகளைத் தவிர்க்க அளவைக் குறைக்க வேண்டும்.

இந்தநிலையில் டக்;ரோலிமஸ் அளவை சரியாகக் கண்காணித்து சரிசெய்யத் தவறினால், அது உயிருக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் இந்த சோதனை கிடைக்கவில்லை. தனியார் எனினும் தனியார் மருத்துவமனைகள் சுமார் 26,000 ரூபாய் செலவில் இந்த பரிசோதனையை வழங்குகின்றன.

இருப்பினும், இது அனைத்து சாதாரண மக்களுக்கும் தாங்கமுடியாத செலவாகும் என்று மருத்துவத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....