2 5
இலங்கைசெய்திகள்

சிறுநீரக நோயாளிகளுக்கான முக்கிய சோதனை: அரச மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்

Share

கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு அவசியமான டக்ரோலிமஸ் அளவு சோதனைகள், மற்றும் சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் குறித்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் காலவரையின்றி தாமதமாகி வருவதாக அரச மருத்துவமனை ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஆய்வக அதிகாரிகளின் கூற்றுப்படி, இரசாயன பற்றாக்குறை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இந்த சோதனை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில், குறித்த இரசாயனங்கள் இல்லாததால் தனது அமைப்பும் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சுரங்கா தொலமுல்ல குறிப்பிட்டுள்ளார்.

டக்ரோலிமஸ் அளவு சோதனை என்பது ஒரு முக்கியமான சோதனையாகும், இது ஒரு மருத்துவர் பரிந்துரைத்தபடி, மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளுக்கு மாதந்தோறும் அல்லது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் செய்யப்பட வேண்டும் .

சோதனை முடிவுகளின் அடிப்படையில்: டக்ரோலிமஸ் அளவுகள் நிலையான வரம்பிற்குக் கீழே இருந்தால், அதன் அளவை அதிகரிக்க வேண்டும்.

அளவுகள் மிக அதிகமாக இருந்தால், கடுமையான பக்க விளைவுகளைத் தவிர்க்க அளவைக் குறைக்க வேண்டும்.

இந்தநிலையில் டக்;ரோலிமஸ் அளவை சரியாகக் கண்காணித்து சரிசெய்யத் தவறினால், அது உயிருக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் இந்த சோதனை கிடைக்கவில்லை. தனியார் எனினும் தனியார் மருத்துவமனைகள் சுமார் 26,000 ரூபாய் செலவில் இந்த பரிசோதனையை வழங்குகின்றன.

இருப்பினும், இது அனைத்து சாதாரண மக்களுக்கும் தாங்கமுடியாத செலவாகும் என்று மருத்துவத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...