12 23
இலங்கைசெய்திகள்

கஞ்சனவினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணிநியமனம்

Share

முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால்(Kanchana Wijesekera )பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கஞ்சன விஜேசேகர எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சராக இருந்த காலத்தில் கடந்த ஜனவரியில் இலங்கை மின்சார சபையில் பாரிய வேலைநிறுத்தப் ​போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாக மின்சார சபையின் செயற்பாடுகளில் பாரிய தடங்கல் ஏற்பட்டிருந்தது.பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இலங்கை மின்சார சபையை துண்டாடி தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டி குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய தொழிற்சங்க பிரமுகர்கள் 62 பேரை அப்போதைய அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணியிடை நீக்கம் செய்திருந்தார்.அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் (24) மின்சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி( Kumara Jayakody), குறித்த ஊழியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையை இரத்துச் செய்து, அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...