tamilni 191 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்

Share

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதிலும் காணப்படும் கைத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் டீசல் தொகையை வரையறுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய ஒயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எவ்வாறு எனினும் சினோபெக் நிறுவனத்திற்கு அவ்வாறு எவ்வித அறிவுறுத்தல்களையும் அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய போது அறிமுகம் செய்யப்பட்ட கியூ ஆர் முறைமை புதிய பொலிவுடன் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்கள் பிரச்சினைகளை எதிர் நோக்காத வகையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் ஓர் பொறிமுறையை உருவாக்குவது அரசாங்கத்தின் இலக்கு என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...