25 68c93ffae28ac
இலங்கைஅரசியல்செய்திகள்

வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை: தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Share

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்குத் தமது ஜனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழுவுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டமானது எதிர்வரும் தேர்தல்களில் ஒரு முன்னோடித் திட்டமாக முதலில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்பதற்கான நடைமுறைச் சிக்கல்கள் கண்டறியப்படும்.

இது தொடர்பாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவைத் தொடர்பு கொண்டு வினவியபோது, பிரதியமைச்சரின் இந்தக் கருத்தை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில்.

தூதரகங்கள் வழியாக அல்லது இணையவழி (Online) ஊடாக வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாட்டின் அரசியல் தீர்மானங்களில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.

இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் குறித்துத் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...