tamilni 263 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையை நிலையானதாக்க விசேட கூட்டத்தொடர்

Share

எரிபொருள் விலையை நிலையானதாக்க விசேட கூட்டத்தொடர்

வருங்கால தேவையின் போக்கிற்கு ஏற்ப, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பரிசீலித்து வருவதாக ஒபெக் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஒபெக் கூட்டத்தொடர் நவம்பர் 26ம் திகதி நடைபெறும் என்றும், குறித்த கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் , எரிபொருள் விலையை நிலையானதாக வைத்திருப்பதற்காக எதிர்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இறுதியாக இம்மாதம் முதலாம் திகதி(01.11.2023) எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 423 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஒட்டோ டீசல் 356 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 431 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் ​அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 249 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...