rtjy 95 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

Share

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி, தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் நீதிபதிகளை குறிப்பிடுவது, போன்ற செயல்கள், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்காலக் குழுவொன்றை நியமிப்பது மற்றும் நீதிபதியின்; உத்தரவு தொடர்பில்,அமைச்சரவை அமைச்சர் ஒருவர் செய்த குற்றச்சாட்டுகளால் தமது சங்கம் கவலையடைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவினால், சிறிலங்கா கிரிக்கட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு, நலன்களுக்கு எதிரானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் நீதித்துறையின் சுதந்திரம் என்பது சட்டத்தின் ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடாகும்.

இந்தநிலையில், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை விசாரிக்க சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்றவர்கள்; நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.

இந்தநிலையில் நீதித்துறையின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது நீதித்துறை அமைப்பின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். அத்துடன் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தையும் நீதி அமைப்பின் ஒருமைப்பாட்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

எனினும், நீதித்துறைக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது எனக் கண்டறியப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட தண்டனைத் தடைகள் விதிக்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...