தினேஷ் குணவர்தன
இலங்கைசெய்திகள்

ஒழுக்கம் உள்ள நாடுகள் உலகில் முன்னேறிச் சென்றுள்ளன – பிரதமர் தினேஷ் குணவர்தன

Share

ஒழுக்கம் உள்ள நாடுகள் உலகில் முன்னேறிச் சென்றுள்ளன – பிரதமர் தினேஷ் குணவர்தன

பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் கல்வி முன் பயிற்சி பயிலுனர் காலத்தை பூர்த்தி செய்த அபிவிருத்தி உதவியாளர்களை அலுவலக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனங்கள் வழங்கல் மற்றும் ஒரு நாள் பயிற்சித் தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (30)உள்நாட்லுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.

 

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

 

பொது சேவை பல்வேறு சவால்களை கடந்து பயணிக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வாய்ப்பை வழங்கினார். இன்று இந்தப் பணியில் எத்தனை பேர் எஞ்சியுள்ளனர்? அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் விலகிச் சென்றுவிட்டனர். வெற்றிக்கு பொறுமை தேவை என்பதை நீங்களும் நானும் சிறுவயதிலிருந்தே கற்றுக்கொண்டிருக்கிறோம். விட்டுச் சென்றவர்கள் அதைக் கற்றுக்கொள்ளவில்லை. பொறுமையுடன் வாழ்வில் எவ்வளவு வெற்றிகளை அடைய முடியும். இது வாழ்க்கைக்கு மட்டுமன்றி ஒரு நாட்டுக்கும் பொருந்தும். ஒழுக்கம் உள்ள நாடுகள் உலகில் முன்னேறிவிட்டன. உலகில் ஒழுக்கமான சமூகங்கள் முன்னேறியுள்ளன. ஒழுக்கம் இல்லாத ஒரு பிரதேசம், ஒரு சமூகம், நாடு குழப்பத்திலேயே வீழ்ந்து விடுகின்றது.

 

நாட்டுக்கு சேவை செய்வதற்கான முக்கிய சேவை அரச சேவையாகும். எனவே, அரச சேவையின் கௌரவம், ஒழுக்கம், நம்பிக்கைகள், இலக்குகளை அடைந்துகொள்ள அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். அதைத்தான் ஒரு நாடாக நாம் எதிர்பார்க்கிறோம். நீங்கள் கடினமான ஒரு இடத்தில் வேலை செய்யலாம். மற்றும் நீங்கள் ஒரு வசதியான இடத்தில் வேலை செய்யலாம். நீங்கள் எங்கு வேலை செய்தாலும் பொறுப்புடன் அதை நிறைவேற்றுங்கள். பொறுப்பும் கடமையும் இருக்கும்போது முடிவுகளை எடுப்பதில் சவாலை எதிர்கொள்கிறீர்கள். உங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் அரச சேவையில் இலகுவாக நுழைவதற்கு தடை இருந்தது. அதற்குப் பதிலாக, அரசு உருவாக்கிய தகுதிகளை ஆக்கப்பூர்வமாக உருவாக்கி, கல்வித் தகுதிகளை ஒத்த பயிற்சியாக மாற்றும் வாய்ப்பை ஏற்று பயிற்சி பெற்று மேலே செல்ல முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளது. சிலபேது இது முதல் அனுபவமாக இருக்கலாம். இந்த வழியில் உயர்ந்த நிலைக்கு செல்ல எமது பல்கலைக்கழக முறைமையில் தனியானதொரு பல்கலைக்கழகம் சேர்க்கப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கவில்லை என்பதற்காக பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வழியில்லை என்று நினைக்க வேண்டாம். இதன் மூலம் அரச சேவையில் தகுதியை உருவாக்கிக் கொண்டு முன்னேற முடியும் என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம்.

 

இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் இங்கு கருத்துரை வழங்கினர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி, பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மற்றும் நியமனம் பெற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...