rtjy 207 scaled
இலங்கைசெய்திகள்

தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது

Share

தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது

பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்திற்கு தகவல்களை வழங்கி சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே தனுஷ்விற்கு தடை விதிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தடை நீக்கம் தொடர்பிலும் சட்ட மா அதிபருடன் கலந்தாலோசனை செய்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தனுஷ்க தொடர்பிலான வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் போது தனுஷ்க பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.

சிட்னி பொலிஸார் தனுஷ்கவை கைது செய்யததனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபை, அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்திருந்தது.

இந்நிலையில், நீதிமன்றின் ஆலோசனை இன்றி இலங்கை கிரிக்கெட் சபை தடையை நீக்கியுள்ளாகவும், இது நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் செயல் எனவும் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...