இலங்கைசெய்திகள்

தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது

Share
rtjy 207 scaled
Share

தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது

பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்திற்கு தகவல்களை வழங்கி சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே தனுஷ்விற்கு தடை விதிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தடை நீக்கம் தொடர்பிலும் சட்ட மா அதிபருடன் கலந்தாலோசனை செய்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தனுஷ்க தொடர்பிலான வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் போது தனுஷ்க பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.

சிட்னி பொலிஸார் தனுஷ்கவை கைது செய்யததனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபை, அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்திருந்தது.

இந்நிலையில், நீதிமன்றின் ஆலோசனை இன்றி இலங்கை கிரிக்கெட் சபை தடையை நீக்கியுள்ளாகவும், இது நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் செயல் எனவும் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...