12 15
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் புதன்கிழமை மொட்டுக் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்

Share

எதிர்வரும் புதன்கிழமை மொட்டுக் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் புதன்கிழமையன்று அறிவிக்கப்படும் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பிரபல வர்த்தகரும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய ஒரே நபருமான தம்மிக்க பெரேரா மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என உதயங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரி ஆப்பம் சாப்பிட்டு சென்றது போல் இல்லாமல் பசில் ராஜபக்ச ரணிலை வெற்றிக்கொள்வார் என கூறியுள்ளார்.

அதனுடன் நின்று விடாது தம்மிக்க பெரேராவை தேர்தலில் களம் இறக்கி அவரை ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தும் வரையில் பசில் ராஜபக்ச தனது நகர்வில் இருந்து வெளியேரமாட்டார் எனவும் நிச்சயமாக தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி பதவியில் அமர்த்துவார் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...