tamilni 144 scaled
இலங்கைசெய்திகள்

தங்கம் கலந்த பருப்பு குழம்பு: என்ன விலை

Share

தங்கம் கலந்த பருப்பு குழம்பு: என்ன விலை

உணவகமொன்றில் 24 கரட் தங்கத்தூள் கலந்து உணவு பரிமாறப்படும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துபாயில் பேரங்காடியொன்றில் இயங்கிவரும் உணவகமொன்றிலேயே “தால் கஷ்கான்” என்ற இந்த தங்க உணவு பரிமாறப்படுகிறது.

புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் டுபாயில் நடத்திவரும் உணவகத்திலேயே பருப்புக்கறியில் தங்கத்தூள் கலந்து இந்த வித்தியாசமான உணவை பரிமாறுகின்றார்.

விசேடமாகத் தயாரிக்கப்படும் இந்தப் பருப்பு குழம்பானது ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது.

அதிலும் சிறப்பான அம்சம் என்னவென்றால் 24 காரட் தங்கத் தூளானது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே கலக்கப்பட்டு, நெய்யுடன் பரிமாறப்படுகிறது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்ற நிலையில் இது தொடர்பாக பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...