இளைஞர் யுவதிகள் 12 பேர் கைது
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்! – 12 பேர் கைது

Share

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 10 ஆண்களும், 2 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – பொல்துவை சந்தியில் நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழையும் பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு செல்லும் பிரதான வீதி இன்று காலை வீதித்தடைகளால் மறிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விடத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்துக்குப் பின்னாலுள்ள மாதிவெல நுழைவாயிலைப் பயன்படுத்தினர்.

அப்பகுதியிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்த போதிலும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதாகைகளை ஏந்தியவாறு சிறிய எண்ணிக்கையிலானோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், பத்தரமுல்லை தியத்த உயனக்கு அருகில் பொல்துவ சந்தியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அவ்விடத்தைக் கடந்து சென்ற அமைச்சர்கள் மற்றும் நாடாமன்ற உறுப்பினர்களுக்குப் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவ்விடத்துக்கு வந்த கலகமடக்கும் பொலிஸ் குழுவினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.

தாம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தவிர வேறு எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருடனான குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்ய முயன்ற வேளையில் அமைதியின்மை ஏற்பட்டது.

கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேர் பொலிஸ் பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...